search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
    X

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சார்பில் நவம்பர் 14-ந்தேதி தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20-ந்தேதி சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் என்ற தலைப்பில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மேல்நிலை ப்பள்ளியில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் சுமார் 200 மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×