என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு.

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

    • மாஸ்க் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் டவுன் பஞ்., சார்பில் நேற்று கொரோனா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை நெமிலி தாசில்தார் ரவி, டவுன் பஞ்.தலைவர் கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது துப்புரவு பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு ஊழியர்கள் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சென்று மாஸ்க் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதே போல் பிளாஸ்டிக்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பிளாஸ்டிக் கேரி பேக்கை விற்பது தெரிய வந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்தனர்.அப்போது துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், வரித் தண்டலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் மருதாச்சலம், விஏஓ டோமேசன், திமுக நகர செயலாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் சகிலா, செந்தமிழ் செல்வன், சாரதி, கிராம உதவியாளர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×