என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறு தானியங்கள் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு
- மகளிர் கூட்டம் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் மகளிர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் எடக்குப்பம் கிராமத்தில் தேசிய சிறுதானிய ஆண்டு முன்னிட்டு மகளிர் கூட்டத்தில் சிறுதானிய பலன்கள் மற்றும் அதில் செய்ய கூடிய உணவுகள் பற்றியும் அது மட்டும் இன்றி சிறுதானிய வளர்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தோட்டக்கலை பயிர் செய்வதின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவிகள் மு.கனிமொழி, மு.கார்த்திகா, சு.கீர்த்தனா, பெ.கவுசிகா, நா.லோகேஸ்வரி, பொ.லோகேஸ்வரி ஆகியோர் இந்த கூட்டத்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story






