search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் கட்டிட மேஸ்திரி கைது
    X

    குண்டர் சட்டத்தில் கட்டிட மேஸ்திரி கைது

    • இளம்பெண்ணை கடத்திய வழக்கில் நடவடிக்கை
    • பள்ளி மாணவருக்கும் தொந்தரவு கொடுத்தார்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் உப்புமேட்டு காலனி ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற அருள் (வயது 29). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 6 - ம்தேதி அப்பகுதியில் நடைபெற்ற திருவிழாவின் போது, 6 - ம் வகுப்பு படிக்கும் மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் இவர் மீது இளம்பெண்ணை கடத் தியதாகவும் வழக்கு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவரது குற்ற செயல்களை கட்டுபடுத்தும் பொருட்டு ராஜ்குமார் என்ற அருளை குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி ராஜ்குமார் என்ற அருளை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×