search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து டிரைவர் படுகாயம்
    X

    வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து டிரைவர் படுகாயம்

    • மின்கம்பி உரசியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந் திரன் (வயது 60). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவ ரின் நிலத்தில் இருந்து டிராக்டர் மூலம் வைக்கோலை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பி உரசியதால் வைக்கோல் தீடீரென தீப்பிடித்து எரியத்தொ டங்கி, சில நிமிடங்களில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாச மானது. அப்போது எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டு வைக் கோல் ராஜேந்திரன் மீது விழுந்து தீக்காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த னர்.

    தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக் கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    மேலும் தீவிபத்து குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×