என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக் விபத்தில் வாலிபர் பலி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஜெகதீசன்(22) திருமணம் ஆகாதவர். இவர் தந்தைக்கு துணையாக கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஜெகதீசன் சென்னசமுத்திரம் கிராமத்தில் இருந்து பைக்கில் ஆற்காடு நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
சென்னையிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு ஆற்காட்டை நோக்கி வேன் வந்தது.
ஜெகதீசன் சென்ற பைக் மீது வேன் மோதியது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்