என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் பிணமாக கிடந்த மாணவன்
ஆற்காடு:
ஆற்காடு வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சேதுரா மன். இவரது மகன் தீபேஷ் (வயது 16). ஆற்காட்டில் உள்ள ஒரு நிதியுதவி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மதியம் மாணவனின் சித்தப்பா லாரி டிரைவரான நந்தகுமார் தனது லாரியில் புளிய மர விறகுகளை ஏற்றிக் கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தோல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளர்.
அவருடன் மாணவன் தீபேசும் சென்றுள்ளான். தோல் சுத்திகரிப்பு நிலையத் தின் கேட் பகுதியில் மாண வனை இறக்கிவிட்டு விட்டு, நந்தகுமார் உள்ளே சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது திபேசை காணவில்லை.
அப்பகுதியில் தேடிபார்த்தபோது பயன்பாட்டில் இல்லாத ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் மாணவன் தீபேஷ் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.
இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் எப்படி தொட்டியில் விழுந்து இறந் தான் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்