என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மொபட் மீது அரசு பஸ் மோதி 2 வயது குழந்தை பலி
வாலாஜா;
வாலாஜாபேட்டை பஜார் எம்.பி.டி சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே பழஜூஸ் கடை நடத்தி வருபவர் பாரூக் (வயது 35) இவரது மனைவி ஷாயின் பாணு (30) இவர்களுக்கு ஹத்மா பர்வீன் (7) என்ற மகளும், பரான் (2) என்ற மகனும் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று பாரூக் தனது மகள் படிக்கும் பள்ளியில் பாட புத்தகங்கள் வாங்க மொபட்டில் மனைவி ஷாயின்பாணு, ஹத்மா பர்வீன், பரான் ஆகியோருடன் மொபட்டில் தென்கடப்பந்தாங்கல் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அரசு மகளிர் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களுக்கு பின்னால் வேலூரில் இருந்து கல்பாக்கம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. படுகாயம் அடைந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்