search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
    X

    கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 1 கிலோ எடை கொண்ட பொட்டலங்கள் சிக்கியது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் அம்மூரில் இருந்து ரெட்டியூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அம்மூர் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21), அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) என்பதும், அவர்கள் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×