search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
    X

    கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட் டம் மேல்விஷாரம் புதுப் பேட்டை பகுதியை சேர்ந்த வர் சாதிக் பாஷா. இவரது மகன் ரியாஸ் ரகுமான் (வயது 16). ஆற்காடு தண்டு பஜார் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இஷாத் அகமது மகன் முபாரக் ஷரீப் (16).

    இவர்களின் நண்பர்கள் வேலூர் கொணவட்டம் பகுதியை சேர்ந்த அன்சர் பாஷா மகன் முகமது ஷகில் (16), கலிமுல்லா மகன் வசீம் (16).

    இவர்கள் நான்கு பேரும் ஆற்காடு அடுத்த மேல்விஷா ரம் இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று மதி யம் பள்ளி முடிந்ததும் மேல் விஷாரத்தை அடுத்த நந்தியா லம் பகுதியில் உள்ள 100 அடி ஆழம் கொண்ட செயல்ப டாத கல் குவாரி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர்.

    ரியாஸ் ரகுமான், முபாரக் ஷரீப் ஆகிய இருவரும் முதலில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் பள்ளிக்கு எடுத்துச் சென்ற புத்தகபை மற்றும் சட்டையை கரையில் வைத்து விட்டு தண் ணீரில் இறங்கியுள்ளனர். அப் போது இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். முகமது சகில் மற்றும் வசீம் ஆகிய இருவரும் பின்னால் மற் றொரு மோட்டார்சைக்கி ளில் வந்துள்ளனர்.

    அப்போது எதிரே மோட் டார்சைக்கிளில் வந்த ஒருவர், உங்களுக்கு முன்னால் வந்த பள்ளி மாணவர்கள் கல்கு வாரி குட்டையில் நீரில் தத்த ளிக்கின்றனர் என முகமது சகில், வசீம் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

    உடனே அவர்கள் இருவரும் கல்குவாரி குட்டைக்கு விரைந்து சென்றனர். அதற்குள் மாண வர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

    இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் பயந்து கரையில் வைக்கப்பட்டிருந்த புத்தகபையின் அருகே இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள ரியாஸ் ரகுமான் வீட் டிற்கு சென்று தகவல் தெரிவித் துள்ளனர். மேலும் இது குறித்து ஆற்காடு தீயணைப்பு துறை யினருக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 'விரைந்து சென்று நீரில் மூழ்கிய பள்ளி மாணவர்களான ரியாஸ் ரகுமான் மற்றும் முபாரக் ஷரீப் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகுரியாஸ் ரகுமானை பிணமாக மீட்ட னர். தொடர்ந்து அரக்கோ ணம் ராஜாளி மீட்புபடையின ரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் நீண்டநேர தேடுத லுக்கு பிறகு முபாரக் ஷரீப் உடலும் மீட்கப்பட்டது.

    இருவரது உடல்களையும் பார்த்து பெற்றோரும், உறவி னர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. தொடர்ந்து இருவரது உடல் களும் ஆற்காடு அரசு ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரத் தினகிரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×