search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகராறில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    தகராறில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
    • 2 பேர் சேர்ந்து தாக்கினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், கீழ்விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 20), 18 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் மதுகுடிப்பதற்காக அங்கே இருந்து உள்ளனர்.

    அப்போது இவர்கள் இருவரும் இளங்கோவிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி அவர்கள் 2பேரும் சேர்ந்து இளங்கோவை சரமாரியா கதாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.

    Next Story
    ×