என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலையில் 2 பேர் கைது
    X

    மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

    வாலிபர் கொலையில் 2 பேர் கைது

    • மீன்பிடித்த உ விபரீதம்
    • உறவினர்கள் மறியலால் பரபரப்பு

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி பாவேந்தர் நகரை சேர்ந்தவர் குண்டு என்கிற சுப்பிரமணி (வயது 58). திமிரி அடுத்த விலாரி ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார்.

    மீன் பிடித்தகராறு

    இவருக்கு தெரியாமல், திமிரி ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் கலையரசன் ( 21 ), இவரது தம்பி வசந்த், தனுஷ், கோபி மற்றும் சிலர் இரவு நேரங்களில் விளாரி ஏரி யில் மீன் பிடித்து வந்தததாக கூறப்படுகிறது.

    இதை சுப்பிரமணி தரப்பினர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கலையரசன் தரப்புக் கும் சுப்பிரமணி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு திமிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வீட்டில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த தாக கடந்த 24 ந் தேதி குண்டு ( எ ) சுப்பிரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து கடந்த ஒருமாதமாக இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை 11.45 மணிய ளவில் கலையரசன் , தம்பி வசந்த் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுப்பிரமணியின் உறவினரான திமிரி ராமபாளையம் தெரு வில் உள்ள தினகரன் ( 45 ) வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த தினகரனின் மகன் அசோக்குமார் (25), உறவினர்கள் தினேஷ் (24), சேகர் (60) ஆகியோருக்கும், கலையரசன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார், தினேஷ் ஆகியோர் கலையரசனை கத்தியால் வெட்டினர்.

    வாலிபர் கொலை

    இதில் பலத்தவெட்டு காயம் அடைந்த கலையரசனை அக்கம், பக்கத்தினர் மீட்டு திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலையரசன் இறந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் தரப்பினர் அசோக்குமார் வீட்டை சூறையாடினர். வெளியே இருந்த காய்கறி கடை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 3 டூவீலர்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்குள்ள 3 க்கும் மேற்பட்ட வீடுகளையும் சூறையாடினர். ஒரு சிலர் திமிரி-ஆரணி சாலை யில் அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்த ராணிப் பேட்டை டிஎஸ்பி பிரபு, திமிரி இன்ஸ்பெக்டர் லதா, ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண் டீபன், ராணிப்பேட்டை இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, திமிரி சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற் றும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இன்று காலையில் ஆற்காடு-ஆரணி செல்லும் சாலையில் கலையரசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டனர்.

    இந்த கொலை சம்பந்தமாக தினகரன், அவரது மகன் அசோக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×