என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கார் மீது தனியார் பஸ் மோதி 2 பேர் பலி
காவேரிப்பாக்கம்:
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அடுத்த நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 6 பேர் காஞ்சீபுரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் கார் மீது மோதியது. இதில் கார் முன்பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நிஜாமாபாத்தை சேர்ந்த வெங்கட்ரெட்டி (55) , அவிநாஷ் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களுடன் காரில் பயணித்த பத்ரிநாத் (22), நரசிங் (42), ரமேஷ் (40), கங்காதர் ஆகிய 4 பேரும், பஸ்சில் வந்த 10 ஊழியர்களும் காயம டைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 4 பேரையும், தனியார் நிறுவன பஸ்சில் காயமடைந்த 10 ஊழியர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் வெங்கடரெட்டி, அவிநாஷ் ஆகிய இருவரது உடல்களையும் பிரேத பரிசோ தனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்