search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ வீரர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.

    ராணுவ வீரர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை

    • பூட்டை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பாப்பேரி கிராமம் குளத்தங்கரை தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பரசுராமன் என்பவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பரசுராமன் இவரது மனைவி இருவரும் வீட்டின் முன்பக்கம் கதவை பூட்டிக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து செயின் உட்பட 19 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர் வீட்டிற்கு திரும்பிய பரசுராமன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பரசுராமன் ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர் இதை அடுத்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×