search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்கள் தடுப்புக்குழு தன்னார்வலர்களுக்கு பயிற்சி
    X

    போதை பொருட்கள் தடுப்புக்குழு தன்னார்வலர்களுக்கு பயிற்சி

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்புக்குழு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் கீழ் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட 272 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. இதன் தொடர்ச்சி யாக ராமநாதபுரம் மாவட்டத்தில் "போதைப்பொருள் தடுப்பு குழு" கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு உட்பட்டு கூலிப், ஹான்ஸ், சிகரெட் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்கான தடையை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்யவும் போன்றபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    10.5.2023 அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 தன்னார்வலர்களுக்கு திறன் வளர்ப்புபயிற்சி, மத்திய அரசின் "போதைப்பொருள் தடுப்புப்குழு" தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி மற்றும் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் மீரா போன்றவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×