search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு ஏற்பாடு
    X

    தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு ஏற்பாடு

    • நாளை ஆடி அமாவாசை தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ந வபாஷாணத்திற்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், நாளை (16-ந்தேதி) ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்து உள்ள கடல் பகுதி வரை கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவழி பாதையாக பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×