என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் அலுவலகங்களில் விதை நெல் பற்றாக்குறை
- கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் வேளாண் அலுவலகங்களில் விதை நெல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- விதைநெல் கேட்டு வரும் அனைத்து விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பசும்பொன்
கமுதி, கடலாடி, முது குளத்தூர் ஒரு உள்ளிட்ட 3 தாலுகா வேளாண்மை அலுவலகங்களிலும் விதை நெல் பற்றாக்குறையால் விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து வெளி சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகுளத் தூர் உள்ளிட்ட 3 வட்டார வேளாண்மை அலுவல கங்களில் விவசாயி களுக்கான விதை நெல் 50 கிலோ எடையுள்ள மூடை மானிய விலையில் ரூ.1500க்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மேற்கண்ட 3 தாலுகாக்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில விவசாயிகள் விளை நிலங்களில் உழவு பணி களை மேற்கொண்டு வேளாண்மை அலுவல கங்களில் விதை நெல்லை வாங்கு விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே போதுமான அளவு விதை நெல் வட்டார வேளாண்மை அலுவல கங்களில் இருப்பு வைக்கப்படாததால் தாமதமாக சென்ற விவசாயி களுக்கு விதைநெல் இல்லை என வட்டார வேளாண் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி வெளிச்சந்தை யில் மற்றும் கடைகளில் 30 கிலோ எடையுள்ள நெல் மூடை ரூ.1200க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய தொடங்கிய ஓரிரு நாளிலேயே விவசாயி களுக்கான விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வட்டார வேளாண்மை அலுவல கங்களில் விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 தாலுகா விவசாயிகள் கோரிக்கை வைத்து ள்ளனர்.
இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்கநர் சிவராணி கூறியதாவது:-
கமுதி தாலுகாவில் கடந்த 2 மாதங்களாக 30 டன் விதை நெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
'தற்போது விதை நெல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால் வெளி சந்தையில் வேளாண்மைத் துறை சார்பில் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறோம். கூடிய விரைவில் விதைநெல் கேட்டு வரும் அனைத்து விவசாயி களுக்கு விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






