என் மலர்
உள்ளூர் செய்திகள்

உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
- மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.
சாயல்குடி
சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார் பில் காமராஜரின் பிறந்த நாள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-ம் ஆண்டு தொ டக்க விழாவில் 15 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார் பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச் செயலா ளர் பாஞ்சுபீர் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் காஜா முஹைதீன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் நூருல் அமீன் தொடங்கி வைத்து பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முஹம்மது முஸ்த பா, விமன் இந்தியா மூவ் மெண்ட் மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசி னார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லாரன்ஸ் நரிப்பையூர் ஜமாத் தலைவர் முகம்மது ஆசாத், செயலாளர் அப்துல் ஹமீது, சாயல்குடி வர்த்த சங்க தலைவர் அபுபக்கர், செயலாளர் ராஜா முஹமது அ.தி.மு.க. பிரதிநிதி செய்யது காதர் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் முகம்மது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், பனைத் தொழிலாளர் நலச் சங்க மாநில தலைவர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் 15 மாணவர் களுக்கு உயர்கல்வி படிப்ப தற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முடி வில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.






