என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் நடை அடைப்பு
- சந்திர கிரகணத்தையொட்டிராமேசுவரம் கோவிலில் இன்று பகல் நடை அடைக்கப்படும்.
- இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
ராமேசுவரம்
சந்திர கிரகணத்தை ஒட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் வழக்கமான கால பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதனை யடுத்து வழக்கம்போல் பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் நடை மாலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு அர்த்த ஜாம பூஜைகள் நடந்த பிறகு நடை அடைக்கப்படும்.
சந்திர கிரகணத்தையொட்டி சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரிக்கு செல்லும். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 4 ரத வீதி வழியாக வலம் வந்து கோவிலுக்கு 7 மணிக்கு சென்றடையும். கோவிலில் சந்திர கிரகண பூஜைகள் நடைபெற்ற பின் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்