என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை
- ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
- முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கர்ணன், வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுனர் முருகவேல் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.
புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேனி சை.அக்கீம் (ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர்),காளீஸ்வரி மாலை அணிவித்து இனிப்பு மற்றும் பேனா, பென்சில் வழங்கி வரவேற்றனர்.
ஆசிரியர்கள் மாதவி, பழனியம்மாள், உமா மகேஸ்வரி, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.






