search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. செயற்குழு கூட்டம்
    X

    பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

    பா.ம.க. செயற்குழு கூட்டம்

    • ராமநாதபுரத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் பாரதிநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தான தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.நகர செயலாளர் பாலா வரவேற்றார்

    கடந்த வாரம் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்று சிறை சென்றவர் களை விடுவிக்க உறுதுணை யாக இருந்த மாநில பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் வினோபா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக வைத்து புதிய ஒன்றியத்தை உரு வாக்க கோரி சட்டமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைத்த சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அருளுக்கு இக்கூட் டத்தில் நன்றி தெரி விக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் நன்றி தெரிவித்தார்.மாவட்ட துணைத் தலைவர் முகமது அலி,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலா ளர் இருளாண்டி, கீழக்கரை நகரச் செயலாளர் லோக நாதன், கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் முனிய சாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் சரீப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா ளர் இப்ராஹிம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×