search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய உணவு தானிய கிடங்கு திறப்பு
    X

    புதிய உணவு தானிய கிடங்கு திறப்பு

    • புதிய உணவு தானிய கிடங்கு திறப்பு விழா நடந்தது.
    • விழாவுக்கு தெளிச்சத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் புதிதாக ரூ.12.51 லட்சம் செலவில் உணவு தானிய கிடங்கு அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு தெளிச்சத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திசைவீரன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மங்களேஸ்வரி சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய கட்டிடத்தை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் திறந்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சந்திரமோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜீவ் காந்தி, வார்டு உறுப்பினர்கள் புஷ்பா காளிதாஸ், மாரிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கண்ணன் நன்றி கூறினார்.


    Next Story
    ×