search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
    X

    ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இயல், இசை, நாடகம் போன்ற பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ராசிகா, ஆயிஷத்துல் நஷீதா கலந்து கொண்டனர். கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இயல், இசை, நாடகம் போன்ற பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை இனிய தமிழ் சங்கம், கலை மற்றும் இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். விழாவின் ஒருங்கிணைப்பாளர் மின் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நெடுமால் புகழேந்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×