search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை நகருக்குள் நாளை முதல் ஆம்னி பஸ்கள் வர தடை
    X

    கீழக்கரை நகருக்குள் நாளை முதல் ஆம்னி பஸ்கள் வர தடை

    • கீழக்கரை நகருக்குள் நாளை முதல் ஆம்னி பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சரக்கு லாரிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி க்குட்பட்ட கீழக்கரை முக்கு ரோடு முதல் கடற்கரை வரை உள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்த னர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார் பழனி குமார், நகராட்சி ஆணை யாளர் செல்வராஜ், பொறி யாளர் மீரான்அலி, துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, கீழக்கரை இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    மேலும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாளை (29-ந்தேதி) முதல் ஆம்னி பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும். சீதக்காதி சாலையில் ஒருபுறம் மட்டுமே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.

    Next Story
    ×