search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டலுக்கு அதிகாரிகள் நோட்டீசு
    X

    ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள்.

    ஓட்டலுக்கு அதிகாரிகள் நோட்டீசு

    • ஓட்டலுக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பப்பட்டது.
    • உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாரதி நகரில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கி சாப்பிட்ட முட்டை பிரியாணியில் புழு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்த ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்க வேல் மற்றும் கீழக்கரை உணவு பாதுகாப்பு ஜெயராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் அந்த உணவு மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவை பொருத்து சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தரமற்ற உணவு விற்பனை செய்தது தொடர்பாக ஓட்டலுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×