search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவாஸ்கனி எம்.பி. குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு
    X

    நவாஸ்கனி எம்.பி. குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு

    • நவாஸ்கனி எம்.பி. குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
    • திருப்பாலைக்குடி மக்களுக்கு எம்.பி. உரிய உதவிகளை செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருப்பா லைக்குடி கிழக்கு ஜமாத் தலைவர் கலீல் ரகுமான் கூறுகையில், சமீபத்தில் எம்.பி.க்கு எதிராக சிலர் எதிர்க்கட்சி தூண்டுதலில் தவறான தகவல்களை அவதூறாக பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தி முற்றிலும் தவறானது.

    ஏற்கனவே திருப்பாலைக்குடியில் அடிப்படை வசதி கோரி மக்கள் போராட்டம் செய்ய வேண்டும் என்று கூறியபோது ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அப்படி போராட்டம் ஏதும் செய்ய வேண்டாம். நான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்கள் தேவையை நிறைவேற்றி தருகிறேன் என்று கூறி அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

    ஆனால் சில விஷமிகள் எம்பிக்கு எதிராக சில தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருப்பாலைக்குடி மக்கள் நலனில் எம்.பி. அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முகமது பாருக் கூறுகையில், தற்போது எம்.பி. பேசியதாக ஒரு வீடியோ சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்த வீடியோ மூன்று மாதத்திற்கு முன்பாக வேறு ஒரு நிகழ்ச்சியில் வேறு விஷயத்திற்காக பேசியதை சில விஷமிகள் எடிட்டிங் செய்து அவதூறாக பரப்பி வருகின்றனர் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    திருப்பாலைக்குடி மக்களுக்கு எம்.பி. உரிய உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி கூறிய தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×