search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
    X

    ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

    • ராமநாதபுரத்தில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாநில பொதுச் செயலாளர் பாலை ரபிக், உள்ளிட்ட பலர் பேசினர்.

    ராமநாதபுரம்

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வழிபாட்டு உரிமை பாது காப்புக்கான ஆர்ப்பாட்டம் ராமநாதபுரத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நடந்தது.

    த.மு.மு.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாகான் ஏற்பாட்டில் மத்திய மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதீன், எழுத்தாளர் மதிமாறன், நிர்வாகிகள் வாவா ராவுத்தர், பட்டாணி மீரான் ஷேக் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் சந்தை திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் சோமு, சுலைமான், பொதுச்செயலாளர் ஜமீல், செயலாளர்கள் ஆசாத், நஜ்முதீன் பொருளாளர் ஹசன் அலி, எஸ்.டி.டி.யு. தலைவர் முஸ்தாக் அகமத், மருத்துவ அணி தலைவர் காதர் கனி, வுமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தவ்லத்தியா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் ரபிக் அகமது கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சந்தை திடலில் மாவட்ட தலைவர் சுல்தான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட தலைவர் பாஹிர் அலி வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராவுத்தர் நைனா முகமது, மேற்கு மாவட்ட செயலாளர் சமைய உல்லா, கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா நஜிமுதீன், மேற்கு மாவட்ட பொருளாளர் முகைதீன் அப்துல்காதர், கிழக்கு மாவட்ட துணை தலைவர் கீழை முகம்மது சிராஜுதீன், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரசாக் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் பாலை ரபிக், உள்ளிட்ட பலர் பேசினர்.

    Next Story
    ×