search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டிக்காரர் கைது
    X

    கைது

    பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டிக்காரர் கைது

    • பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.1 லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்த சித்திரை சாமி என்பவரிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீபா என்ற பெண் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இந்தத் தொகைக்கு மாதம்தோறும் ரூ.24 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார். கடன் வாங்கிய பணம் ரூ.3 லட்சத்தில் ரூ.2 லட்சத்தை திருப்பி செலுத்தி விட்டார்.

    ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டிய நிலையில், சித்திரை சாமி அடியாட்களுடன் ஹபீபா வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்தார். நேற்று ஹபீபா கணவருடன் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மீன் கடை அருகே சென்றபோது அவரை வழி மறித்த கந்து வட்டிக்காரர் சித்திரை சாமி, ரூ.1லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஹபீபா திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரை சாமியை கைது செய்தனர்.

    Next Story
    ×