search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25 ஆண்டுகளாக முடங்கிப்போன மலட்டாறு அணை திட்டம்
    X

    25 ஆண்டுகளாக முடங்கிப்போன மலட்டாறு அணை திட்டம்

    • 25 ஆண்டுகளாக முடங்கிப்போன மலட்டாறு அணை திட்டம் முழுமையடைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 54 கிராம மக்கள் பயனடைவார்கள்.

    அபிராமம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் மற்றும் எழுமலை பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கவுண்ட நதி திருமங்கலம் தாலுகா மற்றும் திருச்சுழி தாலுகா வழியாக குண்டாறு என்னும் பெயரில் ராமநாதபுர மாவட்டத்தில் நுழைகிறது.

    இந்த குண்டாறு கமுதியில் ரெகுநாத காவேரி எனும் கால்வாய் வழியாக மலட்டாறு என்னும் பெயரில் கமுதி மற்றும் கடலாடி தாலுகாக்கள் வழியே பாய்ந்து முடிவில் சாயல்குடி அருகே மூக்கையூர்அருகில் கடலுடன் கலக்கிறது.

    இங்குதான் பாக்கு வெட்டி கீழவலசை மக்கள் ஆற்றினை ஒட்டிய புறம்போக்கு பகுதிகளில் பயிரிட்டும் கிணறு தோண்டி பாசனம் செய்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலட்டாறு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 54 கிராம மக்கள் பயனடைவார்கள்.

    மலட்டாறு திட்ட ஆய்வுப் பணிகள் 1965-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நீர்த்தேக்க திட்டம் மூலம் பாசன வசதி நிலங்கள், பாதிப்படை யக்கூடிய நிலங்கள், மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடிய கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு இந்த பகுதியில் அணை ஒன்று கட்டுவதற்கு அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டு மலட்டாறு அணை கட்டும் திட்டத்திற்கு முழுவடிவம் தரப்பட்டது.இந்த அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கியது. எனினும் மலட்டாறு அணை திட்டம் நிறைவு பெற வில்லை.

    இந்த திட்டத்திற்கான உபரி நீர்ப்போக்கி தலை மதகுகள், மணற்போக்கி மதகுகள் முதலியவை கட்டும் பகுதி, இடது மற்றும் வலதுபக்க மண் கரைகள் ஏற்படுத்தப்படும் பகுதி இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் மேலும் சுவற்றின் கிளை வாய்க்கால்கள் தோண்டப் படும் பகுதி அனைத்திற்கும் சேர்த்து சுமார் 425 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்.

    இத்திட்டத்திற்கான அனைத்துப் பணிகளுக்கும் 1994ம் ஆண்டு நிலவரப் படி சுமார் ரூ.17 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

    1991-ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக அறிவித்து முதல்கட்டமாக ரூ.40 லட்சம் ஒதுக்கி நிலம் கையகப்படுத்த உத்தர விட்டது.

    அன்றிலிருந்துஇன்று வரையிலும் மாறி வருகின்ற ஒவ்வொரு அரசியல் சூழ்நிலை களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தப்போவதாக ஒவ்வொரு அரசியல்வாதி யும் கூறிவருகின்றனர். ஆனால் திட்டம் செயல் படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தின் செயல் பாட்டுக்கென பரமக்குடியை தலைமையகமாகக் கொண்டு பொது கோட்ட அலுவலகம் கட்ட 4 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் செயலாக்கத்திலுள்ள மெத்தனம் காரணமாக இக்கோட்டமானது சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம் என மாற்றப் ப ட்டது.

    இந்த திட்டத்திற்காக ஒரேயொரு பிரிவு அலுவலரைக் கொண்டு கமுதியில் உபகோட்டம் ஒன்று இருந்து வருகிறது. முதலில் இந்த திட்டத்தை அ.தி.மு.க . அரசு தொடங்கு வதாக அறிவி த்ததால் இந்த திட்டத்தினை செயல் படுத்துவதில் அதற்கு பின்பு வந்த தி.மு.க. அரசு ஆர்வம் காட்டவில்லை.

    இந்த திட்டம் பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தால் இந்த பகுதி விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மலட்டாறு அணைக்கட்டு திட்டம் செயல் படுத்தப் பட்டால் இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும். எனவே விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

    சமூக ஆர்வலர் அருணாசலம் கூறுகையில், பருவமழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் மலட்டாறு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டால் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட பகுதிகள் பயனடையும் என்றார்.

    விவசாய சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய பகுதி. முழுக்க முழுக்க விவசாயமே முழுநேர தொழிலாக உள்ளது. கமுதி, கடலாடி. முதுகுளத்தூர், திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதி களும் மலட்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டால் செழிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் குடிநீர் ஆதாரம் பெருகும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

    Next Story
    ×