search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2022-23-ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெண்களின் முன்னேற்ற த்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற் கான விருது கள் வழங்கப்பட உள்ளது. எனவே கீழ்க்கா ணும் தகுதியான நபர்களி டமிருந்து கருத்து ருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படு கின்றன.

    தமிழ்நாட்டை பிறப்பிட மாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    மேற்காணும் வகையில் சாதனை புரிந்தவர்களாக இருப்பின் உரிய கருத்துருவுடன் மாவட்ட சமூகநல அலுவலகம், ராமநாதபுரம் (மாவட்ட கலெக்டர் வளாகம்) அணுகி இணைப்பு படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்க வேண்டும். மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் 04567-23046 தொடர்பு கொள்ளவும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×