search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம்
    X

    பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம்

    • பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
    • உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.

    பரமக்குடி

    கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீத தேர்ச்சியும்,பிளஸ்-1 வகுப்பில் 97 சதவீத தேர்ச்சியும் பெற்று பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி நகரில் முதலிடத்தைப் பெற்றது.

    முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தாளாளர் என்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் எம்.சாகுல் ஹமீது, செயலாளர் எம்.சாதிக் அலி, பொருளாளர் ஏ.லியாகத் அலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். 10-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளான எம்.தீபிகா தர்ஷினி, ஹெச்.ரோஹித் கிருஷ்ணா, ஜெ.முகம்மது தஸ்பிக் ராஜா, எம்.சவுரா பிளஸ்-1 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் எஸ்.பிரேமா, எஸ்.சுல்தானா ஜாஸ்மின், எஸ்.அபிராமி ஆகியோருக்கு பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.

    Next Story
    ×