என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் குறைகேட்பு கூட்டம்
- ராமநாதபுரத்தில் இன்று மாலை மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
- தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவ பிரதிநிதிகளின் சார்பில் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரிக்கை விடப்பட்டி ருந்தது. அதன் அடிப்ப டையில் இன்று (9-ந் தேதி) பிற்பகல் 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ராமநாத புரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவ லர்களும் கலந்துகொள்ள இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story