என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்
    X

    இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளில் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்.
    • கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில மாதங்களாக மது, சிகரெட் போன்றவற்றை தொடர்ந்து இளைஞர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தி வரத்தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம், கீழக்கரை நகரில் ஒதுக்குப்புறமான இடங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் ஏராளமான போதை ஊசிகள் கிடக்கின்றன.

    இந்த ஊசிகள் போதை தரும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை ஏற்ற பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அதில் போதை ஏற்றி வருகின்றனர்.

    தற்போது இளைஞர்கள் பலர் போதை மாத்திரை களையும், அது கிடைக்காத இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளையும் பொடியாக்கி அதனை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்புகளில் ஏற்றி அரை மயக்கத்தில் போதையாக இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

    இந்த மரங்களின் இடையில் நடமாட்டம் தெரியாததால் போதை ஊசி மற்றும் மருந்து களுடன் செல்லும் நபர்கள் அங்கு தங்கள் கை நரம்புகளில் போதை ஊசிகளை ஏற்றிக்கொண்டு அரை மயக்கத்தில் பகல் முழுவதும் கிடக்கின்றனர்.

    இதுபோன்ற நபர்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்கள் சிலர் போதை மாத்திரைகளையும், ஊசிகளையும் இருக்கும் இடத்திற்கே வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மன அமைதிக்காகவும், தூக்கமின்மைக்காகவும் விற்பனை செய்யப்படும் தூக்க மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருவது உடல்நலத்திற்கு தீங்கானது.

    இது போன்ற மாத்திரை களை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்ற நிலை உள்ள நிலையில் எவ்வாறு இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பது மர்மமாக உள்ளது.

    கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்வதை விட போதை ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வதில் அதிக லாபம் கிடைப்பதால் இதில் பலர் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை ஊசி மருந்து விற்பனை செய்பவர்களையும், அதனை பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×