search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவனின் இருதய சிகிச்சைக்கு தி.மு.க. நிதியுதவி
    X

    சிறுவனின் இருதய சிகிச்சைக்கு தி.மு.க. நிதியுதவி

    • சிறுவனின் இருதய சிகிச்சைக்கு தி.மு.க. நிதியுதவி வழங்கியது.
    • சண்முகவேல், விவசாய அணி செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழி-சண்முகாபுரம் பகுதியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ரஞ்சித்- சரண்யா தம்பதியரின் 4 வயது மகன் கஜனுக்கு இருதய ரத்தக்குழாயில் பிரச்சினை உள்ளது.

    இந்த சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்பதால் பெற்றோர் மனவேதனையில் இருந்து வந்தனர். தனது அறுவை சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்று சிறுவன் கஜன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் சார்பில் சிறுவனின் பெற்றோரிடம், மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

    தி.மு.க. தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட பெருநாழி - சண்முகாபுரத்தில் உள்ள சிறுவனின் பெற்றோரிடம், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் நிதியுதவியை வழங்கினார். அப்போது ஒன்றிய துணைச் செயலாளர்கள் உதயகுமார், ஆதிமுத்து, கிளைச் செயலாளர் மன்சூர்அலிகான், பிரதிநிதி சண்முகவேல், விவசாய அணி செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×