search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
    X

    அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

    • அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வெண்ணத்தூர் ஊராட்சி ஒன்றியம், சம்பை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் மாணவர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வெளிக்கொணரும் வகையில் தற்போது 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை என 4 வண்ணங்களில் 4 அணிகளாக பிரித்து மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்கும் வகையில் செயல்பட தொடங்கி உள்ளன. 4 அணிகளிலும் உள்ள மாணவ, மாணவர்களின் கல்வித்திறன், விளையாட்டு, பொது அறிவு குறித்தும் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேலும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான பயிற்சிகள் வழங்குவதே இந்த அணிகள் தொடங்கியதன் நோக்கமாகும். அந்த வகையில் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் உருவாக்கப்பட்டு ஆசிரியர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் நல்ல முறையில் திட்டத்தை பயன்படுத்தி திறனை மேம்படுத்தி தங்கள் சார்ந்த அணிக்கு முதலிடம் பெற்றுத் தரும் வகையில் திறமையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×