என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
- அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், வெண்ணத்தூர் ஊராட்சி ஒன்றியம், சம்பை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் மாணவர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வெளிக்கொணரும் வகையில் தற்போது 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை என 4 வண்ணங்களில் 4 அணிகளாக பிரித்து மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்கும் வகையில் செயல்பட தொடங்கி உள்ளன. 4 அணிகளிலும் உள்ள மாணவ, மாணவர்களின் கல்வித்திறன், விளையாட்டு, பொது அறிவு குறித்தும் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேலும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான பயிற்சிகள் வழங்குவதே இந்த அணிகள் தொடங்கியதன் நோக்கமாகும். அந்த வகையில் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் உருவாக்கப்பட்டு ஆசிரியர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் நல்ல முறையில் திட்டத்தை பயன்படுத்தி திறனை மேம்படுத்தி தங்கள் சார்ந்த அணிக்கு முதலிடம் பெற்றுத் தரும் வகையில் திறமையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்