search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    • ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் வகிதா ராணி (வயது 57). இவரது தங்கைக்கு சொந்தமான வீடு நேரு நகர் 10-வது தெருவில் உள்ளது. இவரது தங்கை வெளியூர் சென்று விட்டதால் வகிதாராணி பராமரிப்பில் வீடு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வகிதாராணி அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

    மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இது குறித்து கேணிக்கரை போலீசில் வகிதாராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×