என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உச்சிப்புளியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- ஓ.பி.எஸ். அணி சார்பில் உச்சிப்புளியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழக முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் வழிகாட்டுதலின் பேரில் மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நொச்சி ஊரணி முனியசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அஸ்லாம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி செயலாளர் சிவா வரவேற் றார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சீனிமாரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளு மன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று ஆதரிக்கும் அணியின் வேட்பாளர் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்