search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி கல்வி கடன் முகாம்
    X

    வங்கி கல்வி கடன் முகாம்

    • ராமநாதபுரத்தில் வருகிற 12-ந்தேதி வங்கி கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் வங்கி கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம். இந்த வங்கி கடன் முகாமில் தேசியமய மாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட 17 வங்கிகள் பங்கேற்கின்றன.

    17 வங்கிகள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து ஆவணங்களை சரிபார்த்து விரைந்து கல்வி கடன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.

    ஏற்கனவே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 700 மாணவர்களுக்கான உயர் கல்விக்கான உதவியை தன்னுடைய சொந்த நிதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வரும் நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் கல்வி கடன் பெற்று பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களின் சிரமத்தை இலகுவாக்கும் வகையில் இந்த கல்வி கடன் முகாமை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைத்துள்ளார்.

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பொருளாதார தடையால் உயர் கல்வி தொடர முடியாத நிலையில் இருக்கக்கூடாது. வங்கிகளின் மூலம் கல்வி கடன் பெற்று உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவ-மாணவிகள் இது தொடர்பான விவரங்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகி கேட்டு அறியலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உயர்கல்வியை தொடர பயனுள்ள வகையில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×