search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
    X

    அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

    • அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
    • தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை கீழ் மாவட்ட அரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை கீழ் மாவட்ட அரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது,

    இங்கு சிறந்த இசையாசி ரியர்களை க்கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை , பரதநாட்டியம், நாதசுரம், தவில் , தேவாரம், மிருதங்கம், வயலின் 2022-2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதுவருகின்றன. இதில் 12 முதல் 25 வயது வரைக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.

    இப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம்" பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சிக் கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.350 இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325 சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

    அரசு வழங்கும் சலுகை இலவசப்பேருந்து பயண அட்டை,கல்வி உதவித்தொகை (மாதம் ரூ .400), அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 3-ஆண்டுகள் பயிற்சி முடிக்கும் மாணவர்க ளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    சான்றிதழ்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும், இந்து அற நிலையத்து றைக்கு உட்பட்ட கோவில்களிலும்வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    எனவே விருப்பமுள்ள மாணவ, மாண வி க ள்தலை மையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி , எண்-14, கவுரி விலாஸ் பேலஸ், அரண்மனை, ராமநாதபுரம் – 623501 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×