search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போகலூர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்காத  அதிகாரிகள் மீது நடவடிக்கை
    X

    போகலூர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

    • போகலூர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதலைவர் கூறினார்.
    • மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போகலூர் யூனியன் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார்.

    இதில் துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகை யில், அரியகுடி, முத்துசெல்லா புரம், அ. புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு வரு டத்திற்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கூட நாங்கள் ஊர்களுக்குள் நுழைய முடியவில்லை என்றார்.

    அதற்கு பதில் அளித்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர், சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு முடி யும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

    தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், 15-வது நிதி குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளது. யூனி யன் கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை, மின்வாரிய துறையில் இருந்து அதி காரிகள் வருவது கிடை யாது. பலமுறை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூர் முதல் எஸ்.கொடிக்குளம் செல்லும் சாலை, அனுமனேரி முதல் கோரைக்குளம் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். ஆகவே அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேஸ்வரி, காளிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ட னர், மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×