search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
    X

    ஆட்டோ மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி

    • ஆட்டோ மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
    • மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருேக உள்ள கீழகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மதிவாணன் (வயது 27). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் எலக்ட்ரீசியன் படித்துள்ளார்.

    மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது பணியில் இல்லை. கீழகன்னிசேரியில் இருந்து மதிவாணன் இரவில் பைக்கில் வந்தபோது ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் முதுகுளத்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து முதுகுளத்தார் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜெய்கணேசை கைது விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×