search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் பள்ளியில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்
    X

    மாணவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்.

    ஒட்டன்சத்திரம் பள்ளியில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

    • மாணவ-மாணவிகளிடையே சகோதரத்துவ உணர்வை மேம்படுத்துவதற்காக ரக்‌ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவிகள் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அக்‌ஷ்யா அகாடமி சி.பி.எஸ்.இ மெட்ரிக் மாணவ-மாணவிகளிடையே சகோதரத்துவ உணர்வை மேம்படுத்துவதற்காக ரக்‌ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளி மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாணவிகள் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    மாணவர்கள் தங்களுக்கு ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள் . விழாவில் பள்ளியின் சேர்மன் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், முதல்வர் இன்னாசிமுத்து, நிர்வாக மேலாண்மையாளர்கள் செல்வி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×