search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை
    X

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை

    • சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    சென்னை:

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் பொதுவான மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது.

    எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    Next Story
    ×