என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரியகோவில், வீரகனூர் பகுதிகளில் மழை
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக கரியகோவில் பகுதிகளில் கன மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது .
குறிப்பாக கரியகோவில் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8 மணி வரை கரியகோவிலில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூரில் 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 14 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
Next Story






