search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தம்மம்பட்டி சுற்று வட்டார பகுதியில் மழை
    X

    தம்மம்பட்டி சுற்று வட்டார பகுதியில் மழை

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக தம்மம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 17மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 1.4, ஏற்காடு 1.4, ஆத்தூர்1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 20.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×