என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகாசியில் ரெயில் மறியல் போராட்டம்- விருதுநகர், மதுரை எம்.பி.க்கள் கைது
- மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- கொல்லம் விரைவு ரெயில் நிற்காததை கண்டித்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் போராட்டம்
விருதுநகர்:
சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரெயில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிவகாசியில் இன்று ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயல் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயன்றனர். ரெயில் நிலையம் நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், சிவகாசி எம்எல்ஏ அசோகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
Next Story






