search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்
    • நள்ளிரவில் அன்னம் கதவை திறந்த நிலையில் அவரது வீட்டிற்குள் 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் அதிரடியாக புகுந்த‌து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல் நிலையம் அருகே உள்ள ஆவுடையாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 66). இவர் பால்வளத் துறையில் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.‌

    இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சம்பவத்தன்று வீட்டில் அவரின் மனைவி அன்னம் மற்றும் அவர்களது மருமகள் ரமாபிரபா ஆகியோர் இருந்துள்ளனர்.

    நள்ளிரவு 2.30 மணிக்கு மின்சாரம் இல்லாத நிலையில் இன்வெர்ட்டரை இயக்க ஆதிமூலத்தின் மனைவி அண்ணன் சென்ற நிலையில் யாரோ சிலர் கதவை தட்டி உள்ளனர். இதனையடுத்து அன்னம் கதவை திறந்த நிலையில் அவரது வீட்டிற்குள் 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் புகுந்த‌து.

    பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த மூன்று பேரின் வாயில் துணியை வைத்து அடைத்து பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.

    மேலும் அவர்களை தாக்கியதோடு அன்னம் மற்றும் அவரது மருமகள் ராமபிரபா அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளையும், பீரோவில் இருந்த ரூ.82,500 பணம், 2 விலை உயர்ந்த செல்போன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து போலீசாருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் வல்லத்திராகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடம் வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே விசாரணை மேற்கொண்டார். கொள்ளை தொடர்பாக வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×