search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    டாஸ்மாக் கடையை அகற்ற கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • தேவர்முக்குலம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அக்கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினந்தோறும் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவர்முக்குலம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அக்கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இந்த டாஸ்மாக் உள்ளது. தினந்தோறும் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளது.

    இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், இளைஞரணி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×