search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
    X

    பயிற்சி நடந்த போது எடுத்த படம்

    எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
    • மாணவர்களை வெற்றி பெற வைப்பதற்கு ஆசிரியர்கள் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறி யியல் கல்லூரியில் ஸ்காட் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்காக புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

    ஸ்காட் கல்வி குழும இயக்குநர் ஜான்கென்னடி வரவேற்று பேசினார். பொதுமேலாளர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் எவ்வாறு திறமையாக பணியாற்றவேண்டும் என்பது குறித்து சிறப்புரையாற்றினார். கல்வியியல் கல்லூரி பேராசிரியர் லெனின் கலந்து கொண்டு மாணவர் களுக்கு கல்வி அளிப்பதிலும், அவர்களிடையே சிறந்த பண்பாடுகளை அளிப்ப திலும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியம்.

    மாணவர்களை திறமை யாக நிர்வகிப்பதில் ஆசிரியர் கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    மாணவர்களை வெற்றி பெற வைப்பதற்கு ஆசிரியர்கள் தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது போன்ற புத்தாக்க பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் பொது மேலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், ஸ்காட் கல்வி குழும இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.ஸ்காட் கல்வி குழும இயக்குநர் முகமது சாதிக் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    Next Story
    ×