என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை
- அறந்தாங்கி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
- கணவனுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பிடாரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி விஜயராணி (வயது 35). 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவாராம். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானம் படுத்துவார்களாம்.
வழக்கம் போல் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாராம். இதனால் மனவேதனையடைந்த விஜயராணி வயலுக்கு பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லி விஷத்தை அருந்தியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜயராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்பத்தகராறில் பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






